240நாமக்கல் கவிஞர் பாடல்கள்

திறம றிந்திதன் தெய்வ சக்தியைத்
       தேசம் முற்றிலும் ஓதினால்
உரம்மி குந்திடும் பயிர்செ ழித்திடும்
       உணவி லாக்குறை ஏதினி?       2

கடவுள் ஆணையை மீறு கின்றநம்
       கபட நாடக வாழ்வினால்
அடவி தந்திடும் பகைமை முற்றிலும்;
       அழிவு செய்துள தாழ்வினால்
கடுமை யாகிய பஞ்சம் மிஞ்சிடக்
       காலம் மாறின பருவமும்
மடமை விட்டிடக் கடமை கண்டினி
       மரம் வளர்ப்பது கருதுவோம்.       3

நிழல்கொ டுத்திடும் மரம னைத்தையும்
       விறகெ ரித்துள நிந்தையால்
தழல்பு குந்துநம் சமையல் செய்திடச்
       சாண முற்றிலும் வெந்ததால்
தழையி லாமலும் எருவி லாமலும்
       தகுதி யற்றுள மண்ணிலே
விழல்மு ளைக்கவும் சார மில்லைபின்
       விளைவு எப்படி எண்ணலாம்?       4

வனமி ருந்திடில் மழைபொ ழிந்திடும்
       வான நீதியின் சத்தியம்
வனம ழிந்தது மழைகு றைந்தது
       வாய்மை கண்டனம் இத்தினம்
மனமு வந்தினி நாட்டி லெங்கணும்
       மரம டர்ந்திட செய்குவோம்.
தினமி குந்திடும் தானி யக்குறை
       தீர்ந்தி டும்படி உய்குவோம்.       5