13. துணைபுரி முருகன் முருகனென்றபெயர் சொன்னால் - தோழி உருகு தென்றனுளம் என்னே! பெருக நீர்விழிகள் சோர - மனம் பித்துக் கொள்ளுதுள் ளூர! (முரு)1 கந்த னென்றுசொல்லும் முன்னே - என் சிந்தை துள்ளுவதும் என்னே? உந்தும் பேய்ச்சுரைகள் உளறி - வாய் ஊமை யாகுதுளம் குளிர! (முரு)2 வேல னென்றபெயர் கேட்டே - ஏனோ வேர்வை கொட்டுதுதன் பாட்டில்! கால னென்றபயம் ஓடிப் - புதுக் களிசிறக்குதடி சேடி (முரு)3 குமர னென்றஒரு சத்தம் - கேட்டுக் குளிர வந்ததடி சித்தம்! அமர வாழ்வுபெறல் ஆனேன் - இனி அடிமை யார்க்குமிலை நானே! (முரு)4 குகனெனச் சொல்வதற் குள்ளே - நான் அகம்ம றந்தேன்அது கள்ளோ! தகதக வென்றொரு காட்சி - உடனே தண்ணென முன்வரல் ஆச்சு! (முரு)5 ஆடும் மயிலில்வரக் கண்டேன் - சொல்ல அழகும் அதைவிடஒன் றுண்டோ? வீடு வாசல்பொருள் எல்லாம் - துச்சம் விட்டு மறந்தனடி நல்லாள்!(முரு)6 பச்சைக் குழந்தையவன் மேலே - என்றன் பற்று மிகுந்ததெத னாலே? இச்சை யாரமிகத் தழுவி - நானும் இணங்கி யிருந்த தனின்பம் முழுகு! (முரு)7 |