சுதந்தரத்தில் பேரார்வம் சுதந்தரத்தில் பேரார்வம் உச்சிக் கேறிச் சூழ்நிலைக்கே காத்திருந்த மக்க ளுக்குள் மதங்கெடுக்க வெள்ளையர்கள் வந்தார் என்ற மாற்றமது மந்திரம்போல் சீற்ற மூட்ட முதன்முதலாய்ச் சிப்பாய்கள் பரிஹம் பூரில் வெள்ளையர்க்குக் கீ்ழ்ப்படிய முடியா தென்றார்; அதன்பயனாய் அவர்களுக்கு விலங்கு பூட்டி அடைத்திட்டார் சிறைக்குள்ளே ஆங்கி லேயர். 6 அதிலிருந்தே சுதந்தரப்போர் ஆரம் பந்தான்; ஆயிரத்தெண் ணூற்றைம்பத் தேழா மாண்டில் மதிகணக்கில் மேமாதம் பத்தாம் தேதி மருவியநாள் ஞாயிற்றுக் கிழமை மாலை பதிசிறந்த மீரத்துப் பட்டி னத்தின் பாங்கிருந்த சிப்பாய்கள் படைகள் மூன்றும் கொதிமிகுந்து வெள்ளையரைச் சுட்டுக் கொன்று கொடிதூக்கிச் சுதந்தரப்போர்க் கோலங்கொண்டார். 7 உடைத்தார்கள் சிறைச்சாலைக் கதவை யெல்லாம் உள்ளிருந்த யாவரையும் விடுவித் தார்கள்; படையெடுத்துத் தில்லியைப்போய்ப் பற்றிக் கொண்டு பகதூர்ஷா மன்னனெனப் பறைசாற் றிட்டார்; அடைவாக அங்கிருந்த பட்டாளங்கள் அவைமூன்றும் இவர்களுடன் சேர்ந்து கொண்டு தடையிலராய்த் தம்முடைய பட்டா ளத்தின் தலைவர்களாம் வெள்ளரைச் சுட்டுக் கொன்றார். 8 அன்னியர் கொட்டத்தை அடக்கி விட்டோம் ஆங்கிலேயர்கள் இனிநம்மை ஆள வொட்டோம். என்னுமொரு நம்பிக்கை எழுந்து பொங்க எங்கெங்கும் வெள்ளையருக்(கு) எதிர்ப்புண் டாகி |