புலவர் சிவ. கன்னியப்பன் 309

தொட்ட போதிலும் சற்று வாடிடும்
       சொல்லொ ணாமிக மெல்லிது
இட்ட மாகவே யாரும் ஆசைகொள்
       இன்ப ரோஜா இம்மலர்
கஷ்ட மாகிய வேலை யொன்றையும்
       கட்டி நீசெயல் விட்டிடு;
நுட்ப மாகிய உன்றன் மேனியும்
       நொந்தி டில்துயர் தந்திடும்.       4

நீளுமா மலர்த் தாழை யோடு
       நிறைந்த மாமலச் சண்பகம்
சூழும் நல்ல மணமி குந்தவை
       சுத்த ரிக்கிவை சூட்டுவோம்
வாழும் அந்த வனமு ழுவதும்
       வாடை யோடியு லாவல்போல்
நாளும் நீஉன்தன் வீடி(து) எங்கும்
       நடந்து லாவுதல் வேண்டியே.       5

சேற்றில் நின்று வளர்ந்து நீரினிற்
       சேர்ந்தி ருப்பினும் தாமரை
சாற்றும் ஓரள வுக்கு மீறிடத்
       தான்அ ருந்துமோ நீரினை?
சோற்றின் மூழ்கி யிருந்த போதிலும்
       சொற்ப மாகவே சுத்தமாய்ப்
போற்றி யுண்ணுதல் வேண்டு மென்றுஅந்தப்
       பூமு டித்தனள் பூவையே.       6

195. மக்கட் செல்வம்

பெற்றிடும் செல்வத்(து) எல்லாம்
       பெரியது மக்கட் செல்வம்;
உற்றிடும் இன்பத்(து) எல்லாம்
       உயர்ந்தது மக்கள் இன்பம்;