310நாமக்கல் கவிஞர் பாடல்கள்

மற்றிதை உலகில் எந்த
       மனிதனும் மறுக்க ஒணாது;
சற்றிதை மதித்து நாமும்
       சரிவர நடப்போ மாக.       1

சிறந்திடும் இன்ப மான
       சிசுவது நமக்கு வந்து
பிறந்திடு முன்னும் பின்னும்
       நாம்செய்யும் பிழைக ளாலே
அருந்தவக் குழந்தை இன்பம்
       அனுபவிப் பதற்கு முன்னால்
இறந்திடும் அதனைப் போல
       இன்னொரு துன்பம் உண்டோ?       2

உருவினில் குறைந்த(து) என்றும்
       உடல்மிக மெலிந்த(து) என்றும்
அறிவினில் குறைந்த(து) என்றும்
       அழகினை இழந்த(து) என்றும்
பிறவியின் குறைகள் எல்லாம்
       பெற்றவர் குற்றத் தாலே
கருவினில் அமைந்த(து) அல்லால்
       கடவுளின் குற்ற முண்டோ?       3

விதிவிலக்கு அறிந்து வாழ்ந்து
       விமலனை மனத்துள் எண்ணி
மதியினைக் கொண்டு சுத்த
       மார்க்கத்தில் நின்று நாமும்
புதல்வரைப் பெற்று மற்றும்
       புத்தியாய் வளர்ப்போ மானால்
இதமுற வந்த மக்கள்
       இளமையில் இறப்ப துண்டோ?       4

வித்தினைப் போற்றித் தூவும்
       விளைநிலம் பழுது பார்த்துச்