வீடுவாசல் மாடிகூடம் எங்களுக்கு வேண்டாம் வீதிதிண்ணை சத்திரங்கள் வேணதுண்டு ஆண்டே! பாடுபட்டு ஓடியாடிப் பசியெடுத்தே உண்போம். பயமுறுத்தும் நோய்கள்எங்கள் பக்கம்இல்லை என்போம். 6 பச்சைகுத்திக் குறிகள் சொல்லிப் பாடியாடித் திரிவோம்; பாசிஊசி பலவும் விற்றுக் காசுவாங்கி வருவோம்; இச்சையான உணவைத் தேர்ந்த இடத்திலாக்கித் தின்போம்; இங்கும் அங்கும் எங்கும்தூங்கி இன்பவாழ்க்கை என்போம். 7 பச்சையென்றால் ஒருநிறமாம் பச்சைமட்டும் அல்ல; பலநிறமும் நேர்த்தியாகப் பதியவைப்போம்; நல்ல இச்சையான உருவம்எல்லாம் எழுதிடுவோம் மெய்யே; இப்பொழுதே காட்டுகிறோம் என்னவேண்டும் ஐயே! 8 காதலனோ காதலியோ கண்காணாப் பொழுதில் கண்டுகளி கொண்டுமனக் கவலை கொஞ்சம் ஒழிய ஆதரவாய்க் கைதனிலே அலர்வடிவும் பேரும் அழகாகப் பச்சைகுத்தி அமைந்திடுவோம் பாரும். 9 குறிதவறாக் குறியுரைப்போம் குறைகள் எல்லாம் தீர குற்றம் எல்லாம் நீங்கிவிடக் கோளாறும் கூறி நெறிமுறையாய் நீங்கள் எல்லாம் நெடுநாளும் வாழ நினைந்திடுவோம் எங்கள்குலத் தெய்வமெலாம் சூழ. 10 நாள்கிழமை நட்சத்திரம் பார்ப்பதில்லை நாங்கள் நல்லநல்ல சோசியங்கள் சொல்லிடுவோம் பாங்கே; ஆள்வடிவம் பேச்சுநடை அவைகளையே கொண்டு; அத்தோடு கைரேகை அதையும் பார்ப்ப துண்டு. 11 காசுபணம் பேசிவரும் சோசியரைப் போலக் காகிதமும் பென்சிலுமாய்க் கணக்குப்போட வேண்டாம் ஆசையுடன் பகவதியின் அருள்வாக்கி னாலே அச்சமற்றுக் குறியுரைப்போம் பச்சைக் குத்தல் போல. 12 |