324நாமக்கல் கவிஞர் பாடல்கள்

கண்டதும் கேட்டதும் எப்படிப் போனாலும்
       கச்சேரி வந்துபொய் சொன்னது மெய்
கண்டவர் உண்மையைச் சொல்லவும் வாய்பொத்திக்
       கைகட்டி நின்றிடும் கஷ்டமில்லை.       14

கொடுத்த பணத்தையும் வாங்குதற்கு - நித்தம்
       கோர்ட்டு வாசலில் காத்திருந்தும்
அடுத்த பிறவிக்குப் போகுமட்டும் நொந்தே
       அல்லல் அடைகின்ற தொல்லையில்லை.       15

துக்கத்தைத் சொல்லி அழுவதற்கும் - வெகு
       தூரம் நடந்துபி ராதுசொல்லிப்
பக்கத்தில் நின்றவர் ஏன்என்று கேட்கவும்
       பற்றற்றுப் போவதும் சற்றும் இல்லை.       16

தீண்டப் படாதுஎன்று சொன்னாலும் - அங்கே
       தீண்டுதல் வேண்டித் திரிவதில்லை
வேண்டிய சுகங்கள் யாவும் பிறரைப்போல்
       வேணமட்டும் உண்டு வேறுஎதற்கு?       17

கோயில் குளங்களும் வேணதுண்டு - ஆனால்
       கும்பிடப் போவதில் சண்டையில்லை;
வாயில் ஜெபதபம் வஞ்சனை நெஞ்சத்தில்
       வைத்துப் பிழைத்திடத் தேவையி்ல்லை.       18

வட்டிக்குப் போடப் பணமும் இல்லை - அங்கே
       வட்டிக்கு வட்டிசெய் சட்டம் இல்லை.
பெட்டிக்குச் சாவியும் இல்லாமல் - வெறும்
       பேச்சில் புரண்டிடும் நாணயங்கள்.       19

தானியம் தவசம் அல்லாமல் - அங்கே
       தங்கமும் வெள்ளியும் செல்வமல்ல;
நாணய மாற்றுஎன்ற நாடக ஜாலங்கள்
       நாகரி கப்பித்த லாட்டமில்லை.       20