இலக்கண உயர்வில் சொல்லின் இனிமையில் பொருளில் வாழ்வின் விலக்குகள் விதிகள் வைக்கும் விதத்தினில் விநயம் தன்னில், கலைக்கொடு தனிமை காட்டும் கவிதையின் கனிவில் கற்றோர் தலைகொளும் தமிழைப் போற்றி நம்நாடு புதுமை தாங்கும். 3 எந்தநாட் டெவர்வந் தாலும் எம்மொழி பேசி னாலும் சொந்தநாட் டவர்போ லிங்குச் சுகித்துநிம் மதியாய் வாழத் தந்தநாடுலகில் இந்தச் தமிழகம் போல்ஒன்(று) உண்டோ? அந்தநம் புகழைக் காத்து நம்நாடு அன்பே ஆற்றும். 4 அன்பினால் கலந்து வாழ்ந்தே ‘ஆரியன்‘ ‘அயலான்‘ என்னும் வன்புஎலாம் வரும்முன் னாலே வள்ளளார் வளர்த்த வாய்மை என்பெருந் தமிழால் இந்த இருநில மக்கட்கு எல்லாம் இன்பமே தருவ தாக நம்நாடே இசைக்க வேண்டும். 5 அன்னியம் அறிவிற்கு இல்லை அன்பிற்கும் அளவே இல்லை என்னவே உலகில் மற்ற எவரெவர் மொழியும் ஆய்ந்து |