தன்னொடும் வாழ வைத்த தமிழ்மொழி பெருமை தாங்கி நன்னெறி விளக்காய் நின்று நம்நாடு நலமே நல்கும். 6 புதுத்துறை அறிவைத் தேடிப் போய்அலைந்(து) உழன்று நாடி விதப்பல விஞ்ஞா னத்தை விரித்திடும் மெய்ஞ்ஞா னத்தால் பொதுப்படக் கலைகள் எல்லாம் தமிழிலே புதுமை பூண மதிப்பொடே எவரும் போற்ற நம்நாடு மணக்க வேண்டும். 7 213. இந்தியத் தாய் புலம்பல் காலக் கதியடியோ கைவிரித்து நான்புலம்ப ஆலம் விதையெனவே அளவிறந்த மக்கள்போற்றும் ஞாலத்தில் என்னைப்போல் தவித்தால் ஒருத்தியுண்டோ? நீலக் கடலுலகில் நீடித்தும் பிள்ளைகளால் கோலம் இழந்துநிலை குலைந்துருகி வாடுகின்றேன்! 1 மெத்தப் பகட்டுடையாள் மேற்கத்திப் பெண்ணொருத்தி ‘அத்தை‘யெனக் கூவியென்றன் ஆசார வாசலிலே தத்தித் தடுமாறித் தலைவணங்கி நின்றிருந்தாள். |