புலவர் சிவ. கன்னியப்பன் 341

"புத்தம் புதியபெண்ணே
       போந்தகுறை என்னசொல்லு
சித்தம் கலங்காதே
       சின்னவளே" என்று சொன்னேன்.       2

வெள்ளைத் துகிலுடுத்து
       வெட்டிருந்த பட்டணிந்து
கள்ளக் குறிசிறுதும்
       காட்டா முகத்தினளாய்
அள்ளிச் செருகிவிட்ட
       அழகான கூந்தலுடன்
பிள்ளை மொழிவதெனப்
       பின்னுகின்ற சொற்பேசி
மெள்ளத் தலைகுனிந்தே
       மெல்லியளாள் நின்றிருந்தாள்.       3

"எங்கிருந்தே இங்குவந்தாய்?
       என்னகுறை பெண்மணியே?
சங்கிருந்த வெண்ணிறத்தாய்!
       சஞ்சலத்தால் வந்ததுண்டோ?
இங்கிருந்தே உள்ளதைநீ
       என்னுடைய மக்களுடன்
பங்கிருந்து கொள்வாய் நீ
       பலமொழிவாய்" என்றுசொல்லி
இங்கிதம்நான் சொன்னவுடன்
       இருநாளும் மண்டியிட்டு       4

குன்றி உரைகுழறிக்
       குளிரால் நடுங்கினாள்போல்
சின்னஞ் சிறுகுரலால்
       சிந்தைமிக நொந்த வளாய்
"உன்னுட னேபிறந்தோன்,
       ஊரைவிட்ட ஆரியனாம்