342நாமக்கல் கவிஞர் பாடல்கள்

"முன்னம் உனைப்பிரிந்து
       மேல்நாடு மேவினவன்
அன்னவன் புத்திரிநான்
       அத்தைநீ சித்தம்" என்றாள்.       5

"நெஞ்சம் கலங்காதே
       நீயெதற்கும் அஞ்சாதே
தஞ்சம் உனக்கிருப்பேன்
       தையலே மெய்யிதுகாண்;
கொஞ்சம் இளமையினில்
       குறையுனக்கு வந்ததென்ன?
பஞ்சை எனத்தனியே
       பட்டணத்தை விட்டுவந்தாய்
வஞ்சி இளங்கொடியே
       வந்துபசி யாறுகஎன்"றேன்.       6

சற்றுத் தலைநிமர்ந்தாள்
       தையலவள் புன்சிரிப்பை
உள்ள முகத்தினொடும்
       உள்ளம் குளிர்ந்தவள்போல்
சுற்றி அயல்பார்த்துச்
       சொன்னபடி என்னுடனே
முற்றம் அதனைவிட்டு
       முன்கட்டில் வந்துநின்று
தத்தியதன் மேல்நடக்கத்
       தயங்கினவள் போலநின்றான்.       7

"தாவில்லை உள்ளேநீ
       தாராள மாய்வரலாம்
வா"என்று சொன்னவுடன்
       வல்லியவள் மெல்லவந்தாள்;
தூவெள்ளை யானஅவள்
       துணியும் அணியிழந்தும்