350நாமக்கல் கவிஞர் பாடல்கள்

215. சுதந்தரம் வேண்டும்

கண்ணொளி இன்றி மற்றக்
       கட்டழகு இருந்தால் என்னப்
பண்ணளி இனிமை யூட்டாப்
       பாட்டுகள் கேட்பது என்னப்
புண்ணியப் புகழொன்(று) இல்லாப்
       பொற்பொதி யுடையார் போலும்
திண்ணிய சுதந்தரத்தின்
       தெரிசனம் இல்லா வாழ்க்கை.       1

உண்டிகள் பலவும் செய்தே
       உப்பிலா(து) உண்ணல் போலும்
கண்டொரு கனிவு சொல்லக்
       கனிவுஇலான் விருந்து போலும்
பெண்தரும் அழகு மிக்காள்.
       பிரியம்இல் லாமை ஒக்கும்.
தொண்டுசெய்(து) உரிமை இன்றிச்
       சுகித்துஉடல் வளர்க்கும் வாழ்க்கை.       2

அன்புஅறம் வளர்ந்தி டாமல்
       ஆற்றலும் அறிவும் குன்றும்
வன்புகள் சூதும் வாதும்
       வழக்குகள் வளரும் வாழ்வின்
இன்பமும் ஊக்கம் ஆன்ம
       எழுச்சியும் இன்றி என்றும்
துன்பமும் சோம்பல் சூழும்
       சுதந்தரம் இல்லா நாட்டில்.       3

கல்வியும் கலைகள் யாவும்
       களைமிகும் பயிர்க ளாகும்
செல்வமும் புகழும் தேயும்
       செருக்கவர் தருக்கி வாழ