நல்லவர் வருந்தி வாட நடுநிலை ஞாயம் கெட்டுத் தொல்லைகள் கட்சி கட்டும் சுதந்தரம் இழந்த நாட்டில். 4 இச்சைபோல் இருந்து வாழ ஈப்புழு எறும்பும் கோரும்; உச்சமாம் மனித சென்மம் சுதந்தர உணர்ச்சி இன்றி நச்செனும் அடிமை வாழ்வை நயத்திட ஞாயம் உண்டோ? நிச்சய சபதம் பூண்டு சுதந்தரம் நிலைக்கச் செய்வோம். 5 உலகினுக்கு அறிவு தந்த உண்மைகள் மிகுந்து ஞானக் கலைகளைக் கணித்து சீவக் கருணைசேர் நமது நாடு பலபல கொடுமை முற்றிப் பதைத்திடும் பிறநாட்டார்க்கு நலம்எடுத்(து) உரைக்க வேண்டும் சுதந்தரம் நமக்கு வேண்டும். 6 குறிப்புரை:-இச்சை - விருப்பம்; நச்சு - விடம். ‘கனிவு இலான் விருந்து‘ என்பது,உள்ளத்திலே அன்பு இல்லாமல் இடும் உணவுப் பொருட்கள் ஆகும்; ‘மோப்பக் குழையும் அனிச்சம் முகந் திரிந்து நோக்கக் குழையும் விருந்து‘ என்பது குறள்; ‘ஒப்புடன் முகம்மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி உப்பிலாக் கூழிட்டாலும் உண்பதே அமிழ்தமாகும்; அப்ப முப்பழமொடு முகங்கடுத்து இடுவாராயின் கப்பிய பசியோடு கடும்பசியாகும்‘ என ஒளவையார் நவில்கிறார். |