புலவர் சிவ. கன்னியப்பன் 359

222. தேசீய வாரம்

தேசீய வாரத்தைச் சிந்திப்போம் - இந்தத்
தேசத்தில் தந்தையை வந்திப்போம்
மாசற்ற காந்தியின் நாமமே - என்றும்
மனிதர் குலத்துக்குச் சேமமாம்.       1

சேவைகள் காரியம் வெல்லுமா - அன்றிச்
செல்வச் செருக்குகள் செல்லுமா
தேவை நமக்கின்று சேவைதான் - அது
தெய்வக் கருணையை மேவுமால்.       2

சத்தியம் நம்மிற் குறைந்ததால் - பல
சங்கடம் வந்து நிறைந்ததே.
பத்தியம் விட்டுப் பிரிந்திடில் - என்ன
பயனுள வாகும் மருந்துகள்?       3

நீரில் குளித்திடும் ஆசையால் - சேற்றை
நிறையத்தன் மேனியில் பூசல்போல்
ஊரைத் திருத்திட எண்ணினோம் - சொந்த
ஊழல் மிகுந்திடப் பண்ணினோம்.       4

ஒற்றுமை சேரப் புகுந்தவர் - தம்முள்
ஒருவரை ஒருவர் இகழ்ந்தனர்!
குற்றம் நிறைந்தது நாட்டிலே - உண்ணக்
கூழும்கு றைந்தது வீட்டிலே.       5

223. இலங்கைச் சுதந்தர கீதம்

வீர கேசரி என்ன நின்றுநம்
              வெற்றி ஓசை முழக்குவோம்
       விட்டு ஒழிந்தது கெட்ட காலமும்
              வீழ்ந்து அழிந்தன தீமைகள்