கலைவ ளர்த்துஒரு நிலைகொ டுத்திடும் கருணை வாழ்வு நடத்துவோம் கடமை செய்தபின் உரிமை எய்திடும் கதிய றிந்த கருத்துடன் கொலைவ ளர்த்திடும் மதவெ றித்திமிர் கொடுமை முற்றிலும் அற்றதாய்க் குவல யத்தவர் கவலையற்றிடக் கூடு மானதைச் செய்யவே அலைக டல்நடு அரண்அ மைந்துள அழகு கொஞ்சும் இலங்கையில் அச்ச மற்ற சுதந்த ரத்துடன் ஆண்மை ஓடுஅர சாளுவோம். 3 சேர சோழரின் பாண்டி மன்னரின் செந்த மிழ்த்திரு நாட்டுடன் சேர்ந்தி ருந்திட நேர்ந்தி டும்படி செய்து வைத்தது தெய்வமே! தீர யோசனை செய்யில் இந்தநம் தீயின் நன்மைகள் யாவையும் திட்டமாகவும் ஓட்டி நிற்பது தேவி இந்தியத் தாயுடன் தூர மாகிய தேச மக்களின் தொடர்பு வேண்டியது என்னினும் தொன்று தொட்டுளம் ஒன்று பட்டுள தொலைவு இலாத சரித்திரம் வாரம் மிக்குள இந்தி யாவுடன் தாரம் மிக்குள நட்புடன் வந்த இந்த சுதந்த ரத்தினை எந்த நாளிலும் வாழ்த்துவோம். 4 புத்த தேவரின் போத நன்னெறி போற்றும் சிங்கள மக்களும் பூர ணத்தமிழ் ஞானம் என்பதைப் பூசை செய்திடும் தமிழரும் |