புலவர் சிவ. கன்னியப்பன் 361

கலைவ ளர்த்துஒரு நிலைகொ டுத்திடும்
              கருணை வாழ்வு நடத்துவோம்
       கடமை செய்தபின் உரிமை எய்திடும்
              கதிய றிந்த கருத்துடன்
கொலைவ ளர்த்திடும் மதவெ றித்திமிர்
              கொடுமை முற்றிலும் அற்றதாய்க்
       குவல யத்தவர் கவலையற்றிடக்
              கூடு மானதைச் செய்யவே
அலைக டல்நடு அரண்அ மைந்துள
              அழகு கொஞ்சும் இலங்கையில்
       அச்ச மற்ற சுதந்த ரத்துடன்
              ஆண்மை ஓடுஅர சாளுவோம்.       3

சேர சோழரின் பாண்டி மன்னரின்
              செந்த மிழ்த்திரு நாட்டுடன்
       சேர்ந்தி ருந்திட நேர்ந்தி டும்படி
              செய்து வைத்தது தெய்வமே!
தீர யோசனை செய்யில் இந்தநம்
              தீயின் நன்மைகள் யாவையும்
       திட்டமாகவும் ஓட்டி நிற்பது
              தேவி இந்தியத் தாயுடன்
தூர மாகிய தேச மக்களின்
              தொடர்பு வேண்டியது என்னினும்
       தொன்று தொட்டுளம் ஒன்று பட்டுள
              தொலைவு இலாத சரித்திரம்
வாரம் மிக்குள இந்தி யாவுடன்
              தாரம் மிக்குள நட்புடன்
       வந்த இந்த சுதந்த ரத்தினை
              எந்த நாளிலும் வாழ்த்துவோம்.       4

புத்த தேவரின் போத நன்னெறி
       போற்றும் சிங்கள மக்களும்
பூர ணத்தமிழ் ஞானம் என்பதைப்
       பூசை செய்திடும் தமிழரும்