மூவுலகு ஒருங்கே ஆண்டு முடிவுஇலாச் செல்வம் எய்தி ஏவலில் மமதை கொண்ட இரணியன் உய்யு மாறு தாவிய தரணி என்று தனியுருத் தாங்கி வந்த சேவகன் மெச்சு கின்ற சிறுவனே யன்ன சீலர். 2பகையினால் கொன்று வென்று பயம்பட வாழ்ந்து வந்த வகையிலார் சாதி யோரை வழிபடச் செய்ய வேண்டி மிகமிகத் துன்ப முற்றும் மென்மையால் வென்று கொண்ட மகமது நபியே என்று மதியுளார் சொல்வார் உன்னை. 3 அன்புஒரு வடிவாய் வந்தாய் அற்புதச் செயல்கள் காட்டித் துன்பமே சூழ்ந்த தெய்வத் துரோகிகள் செய்கை யாலே வன்பெரும் சிலுவை தன்னில் வைத்தவர் அறைந்த போதும் இன்பமே நுகர்ந்த தேவன் ஏசுவே என்பார் உன்னை. 4
கனவில் பிணிமூப் போடு சாவினைக் கண்ட பின்னர் இனியிதன் ரகசி யத்தை இன்னதென்று அறிவோம் என்று கனதன ராச போகக் கட்டுஎலாம் விட்டு ஒழித்த புனிதன்அப் பௌத்தன் என்று போற்றுவார் உன்னை யாரும். 5 |