அடிதடி வாழ்க்கை கொண்டும் அன்பினை மறந்து நாளும் கொடியதாம் பணப்பே யாலே குவலயம் அயர்ந்து நொந்து முடிவதற்கு எங்கேகு என்று முரண்படு கின்ற காலை விடிவது பொழுது போல வீசியது உன்றன் காந்தி. 6குண்டுபீ ரங்கி யாலும் கோடியந் திரங்க ளாலும் மண்டிய செல்வத் தாலும் மயக்கிடும் பொருள்க ளாலும் சண்டைகள் சயத்தி னாலும் சலிப்புஇன்றிச் சுகம்எங்கு என்று மண்டலம் இருண்ட போது மதியெனத் தோன்றி னாய்நீ. 7 சாந்தம் ஒன்று இல்லை என்றால் சௌக்கியம் இல்லை என்றே ஆய்ந்தவர் சொன்னது எல்லாம் அகந்தையால் மறந்து விட்டு மாந்தினர் கள்ளே என்ன மயக்கமுற்(று) இருந்த காலை காந்தியென்(று) ஒருவன் தோன்றிக் காத்தனன் உலகை என்ப. 8 சத்தியன் என்பார் உன்னைச் சாந்தமே என்று சொல்வார் பித்தனே யாவான் என்பார் பேடியென்று ஒருசார் சொல்லும் சுத்தனே என்பார் இல்லை துரோகியென் பாரும் உண்டு இத்தனை பெயரும் தாங்கும் இதுவன்றோ பெரியார் செய்கை? 9 |