மனிதர்கள் கடவுள் ஆகார் கடவுளர் மனிதர் ஆவார் புனிதமும் பொறுமை யாவும் பொய்யிலா வாழ்வும் பற்றிக் கனதையும் கருணை பொங்கும் காந்திபோல் வாரை விட்டு இனியொரு கடவுள் என்பார் எங்குளார்? எங்கு ளாரே? 6 கடவுளேபொய்யென் றாலும் கண்டவர் இலையென் றாலும் உடனுல குயிர்ஒன் றிற்கும் ஒருசிறு தீங்கும் எண்ணார். கடனறி சாந்தக் குன்றாம் காந்திபோல் வாரை அன்றி உடலுயிர் உள்ளார் தம்மில் உவப்பது யாரை? யாரை? 7 நம்பின பேருக் கேனும் நம்புதல் அற்றோர்க் கேனும் அம்புவி ஏழைக் காக அருந்துயர் அனைத்தும் தாங்கி வெம்பிய செய்தா ருக்கும் வெருவுள எண்ணான் சொல்லான் இம்பரின் காந்தி வாழ்வை இலையென மறுக்கப் போமோ? 8 ஈரமும்இரக்கம் மட்டும் இருப்பவர் யாரும் எங்கும் ஓரமும் பொய்யும் நீக்கி உயர்குணம் யாவும் காத்து யாரொரு சிறியர்க் கேனும் யாதொரு தீங்கும் ஒப்பான் சீரியன் காந்தி வாழ்வைச் சிறப்பியா(து) இருப்பது எங்கன்? 9 |