420நாமக்கல் கவிஞர் பாடல்கள்

கன்மனம் உடையோர் ஏனும்
       கனிந்திடும் கருணை வாழ்வின்
காந்தியே வீசும் சாந்தக்
       காந்தியே வாழ்க! வாழ்க!       6

258.பூனா வெடிகுண்டு

விந்தையில் விந்தை!காந்தியின் மேலும்
       வெடிகுண்டை யாரோ வீசினராம்!
இந்தும தத்தில் வந்தவர் யாரும்
       இப்படி யும்செய ஓம்புவரோ
நிந்தையில் நிந்தை இதைவிட வேறும்
       இந்திய நாட்டிற்கு வந்திடுமோ!
இந்தவி பத்தில் காந்தியைக் காத்தது
       எந்தப் பொருளதைச் சிந்தை செய்வோம்.       1

சத்தியம்மெய்யே சாந்தமும் மெய்யே
       சாதித்(து) உயர்ந்திட்ட சாதுக்கள்மெய்
நித்தமும் நின்று நம்மை நிறுத்து
       நீதி செலுத்திடும் ஜோதியும்மெய்
பொய்த்திடும் பொய்யே போனது ஐயம்
       புண்ணியம் என்பது உண்மைஅதை
உத்தமர் காந்தியின் மெய்த்தவவாழ்வினில்
       உண்டு வெடித்திட்ட குண்டுசொலும்.       2

மடமையினாலே செய்தனர் என்றே
       மன்னித்து வாழ்த்திய பொன்னுரையால்
அடவியிற் சென்றே ஐம்புலன் வென்றார்
       அந்தணர் முந்துரை தந்தவெலாம்
நடைமுறை தன்னில் தினசரி வாழ்வில்
       நாட்டிடைக் காந்திஜி காட்டி விட்டார்
கடவுளும் உண்மை கருணையும் உண்மை;
       காத்திடும் என்பது பார்த்துவிட்டோம்.       3