வித்தைகளின்நித்தியவி வேக பானு விடியிருளில் தடைவிலக்கும் வெள்ளிவிண்மீன் எத்திசையும் மாலுமிக்கும் இடம்கண்(டு) ஏற இமயம்என இலங்குகலங் கரைவிளக்காம் உத்தமருள் உத்தமனாம் காந்தி என்னும் ஒப்பரிய செகச்சோதி ஒளிந்தது ஐயோ! 2சூரியனும்சந்திரனும் தொலைந்தார் என்ன, சுற்றியுள்ள மீன்களிலும் இருளே சூழ, காரிருளில் கடியஇருள் கவிந்து யாரும் கண்ணிழந்து புண்ணிழந்து கலங்கி ஏங்க, நேருகின்ற பொழுதில் எல்லாம் கவலை நீங்க நிச்சயம்தன் உள்ளிருந்தே ஒளியைநீட்டும் யாரும்இந்த உலகில்இது வரையிற் காணா அற்புதமின் சாரசக்தி அறுந்துபோச்சே! 3 எப்படித்தம்உடல்வளர்த்தும் எதுசெய் தாலும் என்னென்ன காயகற்பம் இழைத்துஉண் டாலும் தப்பிடவே முடியாது தடையில் லாமல் தலைசிறந்த மனிதர்களும் சாக வேண்டும், முப்பொழுதும் உலகநலம் மூச்சாய்க் கொண்டு முறைதவறாத் தவவாழ்வே முடித்த காந்தி இப்படித்தம் உயிர்கொடுத்த பெருமை அன்றோ என்றென்றும் நின்றுஒளிரும் இரவியாகும். 4 உலகறிந்த அறிவையெலாம்ஒன்றாய்ச் சேர்த்தே ஒருசிறிய காந்தி என்ற உடலில் வைத்தார் அலகில்பல அற்புதங்கள் நடத்தி வைக்கும் ஆண்டவனின் திருவுளத்தை அறிவார்யாரோ! இலகும்ஒரு காந்தியிடம் இருந்த சத்தை இவ்வுலகில் பலபேர்கள் பகிர்ந்துகொண்டு கலகம்வரின் அங்கங்கே கருணை காட்டிக் காக்கவென்றே இறைவன்இதைக் கருதினானோ? 5 |