புலவர் சிவ. கன்னியப்பன் 433

சோர்ந்திருக்கும் உலகினுக்குச்
       சுகமெ டுத்தே ஓதுவோம்.
மாந்த ருக்குள் கோப தாப
       வாது சூது மாறவே
காந்தி சொன்ன மார்க்கம் இன்றிக்
       கதிந மக்கு வேறிலை.       1

தமிழருக்குக் கருணை எண்ணம்
       தாயின் பாலில் தந்தது
குமிழை யொத்த உயிரை நல்ல
       கொள்கைக்கு ஈய முந்திடும்
அமுதம் ஒத்த காந்தி மார்க்கம்
       தமிழ கத்தின் செல்வமாம்
நமது சேவை அதனை ஏந்தி
       நாட்டில் எங்கும் சொல்வதாம்.       2

268.தமிழா மறக்காதே!

காந்தியை மறக்காதே- தெய்வக்
கருணையைத் துறக்காதே!
சாந்தியை இழக்காதே - என்றும்
சத்தியம் அழிக்காதே.       (காந்தி)1

வள்ளுவன் திருக்குறளைத் - தந்து
வான்புகழ் பெருக்கடைந்த
தெள்ளிய அமிழ்தமெனும் - மொழியாம்
தெய்வத் தமிழ்மகனே!       (காந்தி) 2

திருக்குறள்அறிவுஎல்லாம் - ஒன்றாய்த்
திரண்டுள நெறியெனவாம்
உருக்குறள் காந்திமகான் - தந்துள
ஒப்பரும் சாந்த வழி.       (காந்தி) 3

அவ்வழிபற்றி நின்றோம் - உலகின்
அற்புத வெற்றி கண்டோம்.