எவ்வித இடைஞ்சலையும்- அதனால் எளிதில் கடந்திடலாம். (காந்தி)4 போர்வெறிக் கெடுபிடியால் - அஞ்சிப் பூதலம் நடுநடுங்க நேர்ந்துள சமயம்இதில் - காந்தியின் நினைப்பே அமைதிதரும். (காந்தி)5 ஒவ்வொரு காரியமும் - பகவான் உணர்வொடு கோருவதாய்த் தெய்விக பக்தியுடன் - தேசத் திருப்பணி சக்திதரும். (காந்தி)6 பிரார்த்தனை செய்யாமல் - காந்தி பெயர்த்தடி வைப்பாரோ? பார்த்தோம் கண்ணார - அதனால் பயன்பெற எண்ணோமா? (காந்தி) 7 பக்தியில்குறைந்துவிட்டோம் - மோகம் பதவியில் நிறைந்துவிட்டோம் சத்திய சாந்தத்தில் - மிகவும் சலிப்பெனச் சோர்ந்துவிட்டோம். (காந்தி)8 வேறுள பேச்செல்லாம் - சற்றே விலக்கிநம் மூச்செல்லாம் தேறிய காந்திவழி - மீண்டும் திடமுற ஆய்ந்திடுவோம். (காந்தி)9 காந்தியம் நம்உடைமை - அதனைக் காப்பது நம்கடமை காந்தியம் வாழ்ந்துஒளிர - தெய்வக் கருணையைச் சூழ்ந்திடுவோம். (காந்தி)10 |