436நாமக்கல் கவிஞர் பாடல்கள்

புத்திகெட்டகேள்விசிலர் கேட்டிட் டாலும்
       பொறுத்துவிடை காந்தியைப்போல்புகலவேண்டும்
பத்தியம்போல் பதற்றமுள்ள பாஷை நீக்கிப்
       பரிவாகப் பணிமொழிகள் பதிக்க வேண்டும்.       4

புகழ்ச்சியையும்இகழ்ச்சியையும் சமமாய் எண்ணிக்
       காந்தியைப்போல் பொதுநோக்கும்பொறுமை வேண்டும்
மகிழ்ச்சியிலே மதிமயங்கித் தடுமா றாமல்
       காந்தியைப்போல் மனதுஅடக்கப் பயிலவேண்டும்
வெருட்சிதனை வேரோடு களைந்து நீக்கக்
       காந்தியைப்போல் விரதங்கள் பழகவேண்டும்
நிகட்சிகளைக் காந்தியைப்போல் நிறுத்துப்பார்த்து
       நேர்மையுடன் குற்றம் எல்லாம் நீக்கவேண்டும்.       5

வருகின்றயாவருக்கும் எளிய னாகக்
       காந்தியைப்போல் வரவேற்கும் வழக்கம்வேண்டும்
தருகின்ற சந்தேகம் எதுவா னாலும்
       காந்தியைப்போல் தணிவாகத் தர்க்கம்செய்து
திரிகின்ற மயக்கத்தைத் தீர்த்து வைத்து,
       திடமறிந்த வழிகாட்டும் தெளிவு வேண்டும்.
புரிகின்ற புத்திமதி எதுசொன் னாலும்
       புண்ணின்றிக் காந்தியைப்போல்புகட்ட வேண்டும்.       6

எத்தொழிலைச்செய்தாலும் காந்தியைப் போல்
       எசமானர் கடவுளென எண்ண வேண்டும்
சத்தியத்தைக் கருணையுடன் சாதித் திட்டால்
       சரியாக மற்றது எல்லாம் சாயும் என்ற
பத்தியத்தைக் காந்தியைப்போல் பார்த்துக்கொண்டால்
       பாதகமோ சாதகமோ பலன்கள் எல்லாம்
நித்தியனாம் சர்வேசன் கடமை என்ற
       நிசபக்தி காந்தியைப்போல் நினைக்கவேண்டும்.       7

உழைப்பின்றிச்சுகம் விரும்பல் ஊனம் என்று
       காந்தியைப்போல் எல்லோரும் உணரவேண்டும்