கண்ணுக்குத் தெரியாத காட்சிகள் காண்பேன் காதுக்குக் கேளாத கீதங்கள் கேட்பேன் எண்ணிக்கை இல்லாத இன்பங்கள் நுகர்வேன் எல்லாரும் இன்புற எங்கெங்கும் பகர்வேன். 2 மூக்குஎன்றும் முகராத வாசங்கள் போப்பேன் முன்னென்றும் தெரியாத நன்னயம் பூப்பேன் நாக்குஎன்றும் அறியாத நற்சுவை புசிப்பேன் நலிசெய்யும் பசியற்ற நாட்டிடை வசிப்பேன். 3 உடலத்தில் புதுப்புதிதாய் உணர்ச்சிகள் பொங்கும் உள்ளத்தில் உண்மையும் ஞானமும் தங்கும் சடலத்தைப் பெரிதென்னும் உலகத்தை மறப்பேன் சத்திய நித்திய வானத்தில் பறப்பேன். 4 ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் முன்னே அப்படி யேபல ஆண்டுகள் பின்னே போயின வருவன காட்சிகள் தெரியும் புதுமையிற் குறையாமல் என்முன்னே விரியும். 5 15 நா.க.பா. பூ.வெ. எ. 489 |