கேட்டு மகிழ்ந்(து) உனைப் பார்த்து புகழ்ந்திடக் கிட்டினன் இங்கு வந்தேன். 2 தருமம் உணர்ந்தனை கருமம் அறிந்தனை தாயென நீநினைந்தாய்; பெருமை அளித்தனை சிறுமை ஒழித்தனை பெற்ற மனங்களித்தேன். 3
அச்சம் அகற்றினை ஆண்மை பெருக்கினை ஆனந்தம் பொங்குதடா! இச்சை அதன்படி யாவும் உனக்குஇனி இல்லறம் தங்குமடா! 4 தீயவை விட்டனை தூயவைத் தொட்டனை தெளிவடைந் தாய்மகனே! போயின என்னுடை மனக்குறை யாவையும் புத்தொளி பூண்டு விட்டேன்! 5 உன்னை உணர்ந்தனை என்னை உவந்தனை உண்மை அறிந்துவிட்டாய்! இன்னும் எனக்குஇனி என்ன மனக்குறை! இன்னல் மறந்துவிட்டேன்! 6 என்னுடை நாடெனச் சொன்னஉன் சொற்களில் என்மனம் குளிர்ந்த தடா! |