பின்னிய துயர்விடப் பொன்னொளி அணிமணி பூண்டு மகிழ்ந்த தடா! 7 சத்தியம் உன்னுடைச் சித்தம் உதித்தது சஞ்சலம் ஏன்மகனே? பொய்த்தவர் வஞ்சமும் புகுந்தவர் மோசமும் போவது காண்மகனே! 8 சாந்தி பிறந்துயர் காந்தி விரிக்குது சங்கடம் தீர்ந்ததடா! போந்தது புத்துயிர் புகுந்தது தைரியம் புதுவரு டத்தோடே. 9 திங்கள்முன் மாரியில் பொங்கிடும் பால்இனி தேசம் செழிக்குமடா! மங்களம் மங்களம் மங்களம் உனக்கு இனி மகனே எழுந்திரடா! 10 குறிப்புரை:- இன்னல் - துன்பம்; பூண்டு - அணிந்து; சாந்தி - அமைதி; மங்களம் - அழகு; உவந்தனை - மகிழ்ந்தனை; இச்சை - விருப்பம். 282. அவள் (‘அவளும் அவனும்‘ என்னும் நூலினின்று தொகுக்கப்பெற்றது) ‘மான்‘என அவளைச் சொன்னால் மருளுதல் அவளுக்கு இல்லை. |