‘மீன்விழி உடையாள்‘ என்றால் மீனிலே கருமை இல்லை ‘தேன்மொழிக்(கு) உவமை‘ சொன்னால் தெவிட்டுதல் தேனுக்கு உண்டு; ‘கூன்பிறை நெற்றி‘ என்றால் குறைமுகம் இருண்டு போகும். 1
‘மயிலெனும் சாயல்‘ என்றால் தோகைபெண் மயிலுக்கு இல்லை ‘குயிலெனும் குரலாள்‘ என்றால் ஏழிசை குயிலுக்கு இல்லை. ‘வெயில்ஒளி மேனி‘ என்றால் வெயிலிலே வெப்பம் உண்டாம். ‘அயிலெனும் பார்வை‘ என்றால் அழிவின்றி ஆக்கம் இல்லை. 2 ‘சந்திர வதனம்‘ என்றால் சந்திரன் மறுநாள் தேய்வான். ‘அந்தரப் பெண்போல்‘ என்றால் அவளைநாம் பார்த்தது இல்லை ‘செந்திரு மகள்போல்‘ என்றால் திருவினைக் கண்டார் யாரே! சுந்தர வடிவென் றாலும் சொல்லிலே வலிமை இல்லை. 3 ‘கூந்தலை மேகம்‘ என்றால் மேகத்தில் கருமை, கொஞ்சம் ‘காந்தனைக் கைபோ‘ல் என்றால் கேட்டதே கண்டது இல்லை. போந்ததும் வாடிப் போகும் முல்லைதான் பல்லுக்கு ஈடோ? ‘ஏந்திழை‘ என்றுஇட் டாலும் இயற்கையின் எழிலைப் போக்கும். 4 |