‘விரல்களைப் பவளம்‘ என்றால் வீணையை மீட்ட லாமோ? ‘குரல்வளை சங்கம்‘ என்றால் சங்குஒலி குமுறிக் கூவும் ‘கரம்அதைக் கமலம்‘ என்றால் மாலையில் கமலம் கூம்பும் ‘ஒருமரம் மூங்கில் தோளுக்(கு) உவமை‘என் றுரைக்க லாமோ? 5 ‘குமிழ்என மூக்கைச்‘ சொன்னால் கூர்மையும் நேர்மை இல்லை. ‘அமிழ்துஅவள் பாடல்‘ என்றால் தேவரே அமுதம் உண்டார். ‘தமிழ்‘எனும் இனிமை என்றால் தனித்தமிழ் இப்போது இல்லை. ‘கமழ்மணம் தேசம் என்றால் கன்னியின் தாயே காண்பாள். 6 பற்பல உவமை சொல்லிப் பண்டிதர் களுக்கும் கூடக் கற்பனை புரிந்தி டாத கட்டுரை பின்னிக் காட்டும்; சொற்பல அடுக்க வேண்டாம்; சுருக்கமாய்ச் சொல்லப் போனால் அற்புத அழகு முற்றும் இயற்கையில் அமைந்த நங்கை. 7 கண்டவர் மறக்க மாட்டார்; கேட்டவர் காணப் போவார்; அண்டையில் பழகி னோர்கள் அவளைவிட்டு அகல மாட்டார். பெண்டுகள் வந்து வந்து பேசுதற்(கு) ஆசை கொள்வார். சண்டையும் சலிப்பும் எல்லாம் சாந்தமாம் அவளைச் சார்ந்தால். 8 |