468நாமக்கல் கவிஞர் பாடல்கள்

கண்டவர் களிக்கும் தோற்றம்;
       கேட்டவர் மதிக்கும் ஆற்றல்
அண்டையில் பழக்கம் இல்லார்
       அடக்கமாய் அணுகு வார்கள்;
சண்டைகள் ஒடுங்கும் கண்டால்
       சலிப்புகள் சளைப்புக் கொள்ளும்;
தொண்டுசெய் ஏவ லாளர்
       துணுக்கொடு வணக்கம் செய்வார்.       3

படிப்பினில் பட்டம் பெற்றான்;
       பந்துகள் கையால் காலால்
அடிப்பதில் பதக்கம் பெற்றான்;
       அரங்கினில் வேடம் பூண்டு
நடிப்பதில் பரிசு பெற்றான்;
       நாடிய எதையும் நன்றாய்
முடிப்பதில் முயற்சி மிக்கான்
       முற்றிலும் விரும்பத் தக்கான்.       4

செல்வரில் செல்வன் என்ற
       சிறப்புள பிறப்பு வாய்ந்தான்;
கல்வியில் ஆசை மிக்கான்;
       கவிதையில் நேசம் மிக்கான்;
பல்விதக் கலைகள் வேண்டிப்
       பயிற்சியும் முயற்சி செய்வான்;
நல்வழி என்னத் தக்க
       நடைநொடி யுடைய நண்பன்.       5

அழகுள எதையும் கண்டே
       அளவிலா ஆசை கொள்வான்;
பழகிடும் எதிலும் உள்ள
       அழகையே கண்டு பேசும்
எழுதிடும் எழுத்தில் எல்லாம்
       அழகையே ஏற்றிப் போற்றித்
தொழுதிடும் தெய்வ மாக
       அழகையே தூக்கி வைப்பான்.       6