புலவர் சிவ. கன்னியப்பன் 469

உடைகளில் அழகு பார்ப்பான்
       உண்கலம் அழகு பார்ப்பான்
குடைதடி படுக்கை மேசை
       குரிச்சியில் அழகு பார்ப்பான்.
கடைகளில் அழகாய்த் தோன்றக்
       கண்டதை எல்லாம் வாங்கி
அடைவுற வீட்டில் எங்கும்
       அலங்கரித்து அழகு பார்ப்பான்.       7

காலையின் அழகில் பூத்துக்
       காய்கனி நிறைந்து காட்டும்
சோலையின் அழகைச் சொல்வான்;
       சூரியன் சிவந்து தோன்றும்
மாலையின் அழகைப் போற்றி
       மலைகளில் படிந்த மேகச்
சீலையின் அழகைப் போற்றிச்
       சித்திரக் கோலைத் தீட்டும்.       8

கைச்சிறு ‘காமிரா‘வில்
       கண்டதை எல்லாம் ‘போட்டோ‘
இச்சைபோல் எடுத்து வந்தே
       இருட்டறை கழுவிப் பார்ப்பான்;
அச்சிறு படத்தில் எல்லாம்
       அழகையே பொருளாய்ப் பேசி
மெச்சிடும் நண்ப ரோடு
       மிகமிகப் பொழுது போக்கும்.       9

நாடகப் பிரியன்; நல்ல
       நாட்டியக் கலையில் ஆசை
கேடயம் கத்தி யோடு
       ‘கொடிகள்‘ பழக ஆசை
நீடிய நேரம் நீரில்
       நீந்திட நிறைந்த ஆசை.
ஓடமும் தானே ஓட்டி
       உலவிட உவப்பான் உள்ளம்.       10