புலவர் சிவ. கன்னியப்பன் 47

வேற்றுமை பலவிலும் ஒற்றுமை கண்டிடும்
       வித்தையிற் சிறந்தது தமிழ்நாடு.
மாற்றொரு மதத்தையும் போற்றிடும் பெருங்குணம்
       மதமெனக் கொண்டவர் தமிழர்களே.       8

எம்மதம் ஆயினும் சம்மதம் என்பதை
       ஏந்தி நடப்பது தமிழ்நாடு.
அம்மன உணர்ச்சியை அறமெனக் காப்பதில்
       அசைந்திட லாமோ தமிழறிவு?       9

மதமெனும் பெயரால் மக்களை வதைப்பதை
       மாநிலம இன்னமும் சகித்திடுமோ?
விதவிதம் பொய்சொல்லி வெறுப்பினை வளர்த்திடும்
       வெறியரைத் தமிழர்கள் முறியடிப்போம்.       10

குறிப்புரை:- தாபம் - துன்பம்; மடிப்பது - மோசம், வஞ்சம்;
வித்தை - கல்வி.

25. தமிழ் மக்கள்

நிலைபெற்ற அறிவென்ற
       நிதிமிக்க நல்கும்
நிறைவுற்ற அருள்கொண்ட
       நிகரற்ற தெய்வம்
கலைமிக்க தமிழன்னை
       கழல்கொண்டு பாடிக்
கனிவுற்ற மனமொத்த
       களிகொண்டு கூடி
அலையற்ற கடலென்ன
       அமைவுற்று நாளும்
அகிலத்தின் பலமக்கள்
       அனைவர்க்கும் உறவாய்த்
தலைபெற்ற புகழ்கொண்டு
       தவமிக்க ராகித்