நாடுகள் சுற்றுவதால் - பல நல்லன கற்றுவரும். கேடுள வண்டல்களை - விட்டுக் கேண்மையைக் கொண்டுவரும். 8 மானிட வர்க்கம்எலாம் - ஒரு மாதாவின் மக்கள்என்ற ஞான உபதேசம் - தென்றல் நம்மிடை யேபேசும். 9 என்றும் இருந்துலவி - புவி எங்கும் திரிந்திட லால் தென்றல் வருந்தோறும் - நம்முள் தெய்வ நினைப்பூறும். 10 286. இளமை கற்பனை மிகுந்ததும் இளைஞர்மனம் கவிதைக்(கு) உகந்ததும் இளைஞர்மனம் அற்புத உணர்ச்சிகள் அலைபுரளும் ஆனந்தம் வாலிப நிலைதருமே. 1
துள்ளி மகிழ்வதும் இளம்பருவம் துடிதுடிப் புடையதும் இளம்பருவம் அள்ளித் தருவதும் அதன்பெருமை ஆர்வமும் ஆற்றலும் அதன்உரிமை. 2 இன்பம் குளிப்பதும் இளம்பருவம் ஈகையிற் களிப்பதும் இளம்பருவம் துன்பம் நேரினும் மலைக்காது துக்கம் அதனிடை நிலைக்காது. 3 வளர்ச்சியைத் தரிப்பது வாலிபமாம் வல்லமை வரிப்பதும் வாலிபமாம் தளர்ச்சியை மறப்பதும் வாலிபமே தைரியம் சிறப்பதும் வாலிபமே. 4 |