புலவர் சிவ. கன்னியப்பன் 477

கஞ்சத் தனங்களை அறியாது;
       காசு பணம்தர மறையாது;
தஞ்சம் உதவிடத் தாவிவரும்;
       தருணம் வாய்ந்திடில் ஆவிதரும்.       5

சோம்பலை ஒழிப்பதும் வாலிபமாம்
       சோர்வினைப் பழிப்பதும் வாலிபமாம்
நோன்பென நித்தமும் நூல்படிக்கும்
       நுண்ணறி வாகிய பால்குடிக்கும்.       6

புதுமையை விரும்புதல் அதன்உடைமை
       புரட்சிகள் அரும்புதல் அதனிடையே
முதுமையின் பெருமையை எள்ளாது
       மூடப் பழக்கமும் கொள்ளாது.       7

கேலியும் சிரிப்பும் பரபரப்பும்
       கிளர்ச்சியும் காரியத் துருதுருப்பும்
வாலிப உள்ளம் வாடாமல்
       வாழ்ந்திடும் நாடே நாடாகும்.       8

மாணவ இளைஞரின் சிறந்ததனம்
       மாசுகள் படியாக் குழந்தைமனம்
ஆணவம் புகுந்ததைக் கெடுக்காமல்
       ஆண்டவன் அருளை வேண்டிடுவோம்.       9

குறிப்புரை:- வாலிபம் - இளமை; அரும்புதல் - தோன்றுதல்;
முதுமை - இளமைக்கு மாறானது.

287. பூஞ்சோலை

மான்சேர மயில்ஆடக் குயில்பாட மலர்கள்
       தேன்சேர மகரந்தம் திசைதோறும் சிதற
மீன்சேரும் சிற்றோடை மெல்லோசை தவழும்
       பூஞ்சோலை அதிலுற்றுப் புளகித்து மகிழ்வோம்.       1