478நாமக்கல் கவிஞர் பாடல்கள்

பலகற்றும் அறிவென்ற பயனற்று நித்தம்
       கலகத்தை விளைவித்துக் கவலைக்குள் கத்தும்
உலகத்தை ஒருசற்றுப் பொழுதேனும் விட்டு
       விலகற்கும் அமைதிக்கும் வெகுநல்ல இடமே.       2

அன்புஒத்த சுகமூட்டும் அதிலுள்ள பசுமை,
       இன்பத்தின் களிகூட்டும் பலபட்சி இசைகள்;
தென்புற்ற அறிவுஒக்கும் தெளிவான தண்ணீர்;
       துன்பத்தை மறைவிக்கத் துணையாகும் என்னே!       3

கோபங்கள் மிதமிஞ்சிக் கொதிகொண்டு வெந்து
       பாபங்கள் புரிகின்ற பழுதுற்று நொந்து
தாபங்கள் வெகுவாகத் தணிவுற்றே அறிவும்
       சோபிக்க இடம்இந்தப் பூஞ்சோலை செய்யும்.       4

மண்ஒன்று, நீர்ஒன்று, மழையென்பது ஒன்றே
       பண்ணைக்குச் செய்நேர்த்தி பாட்டாளி ஒன்றே
எண்ணற்ற நிறபேதம் எதிலுற்றது என்றே
       கண்ணுற்ற பூஞ்சோலை கதைசொல்ல நின்றேன்.       5

யார்செய்வது இதுவென்றே அதிவிந்தை எய்திப்
       போர்செய்த பலஎண்ணம் புந்திக்குள் செய்து
நேர்செய்த அறிவுற்று நினைவுற்ற பொழுதே
       ஓர்தெய்வம் உளது என்னும் உணர்வுற்றுத் தொழுதேன்.       6

குறிப்புரை:- தென்பு - மகிழ்ச்சி; விலகல் -நீங்கல்; மிதமிஞ்சி -
அளவுக்கு மீறி; நிறபேதம்- இனவேறுபாடு.

288. கதிரொளி

கதிரொளி வந்தது
       களிப்பினைத் தந்தது.
மதிதெளி வுற்றது
       மயக்கமும் அற்றது.