புதியன பலப்பல உணர்வுகள் புலப்பட அதிசயம் மிக்கென அறிவுகள் புக்கன. 1 காலையின் அழகுகள் கதிரொளி வரவால் மாலையின் மயக்கமும் கதிரொளி மறைவால், சோலையின் பசுமையும் கதிரொளி வசமே; லீலைகள் எண்ணில் கதிரொளி நீசமே. 2 உடல்நல முறுவது கதிரொளி உறவால் கடல்சலம் மழைதரல் கதிரொளித் திறமே செடிகொடி மலர்எழில் கதிரொளிச் செயலே கடவுளை உலகினில் காட்டுவது அதுவே. 3 ஏழையும் செல்வனும் இருவரும் சமமே. கோழையும் கொடியரும் கூடத்தன் தமராய் ஆழியை நடத்திடும் கதிரொளி அரசன் வாழிய வாழ்த்திநல் வாழ்வுகள் பெறுவோம். 4 |