ஐயம் இல்லை தெய்வம் உண்டுஎனப் பையப் பைய என்னைப் பழக்கி அன்னை என்னுடைச் சின்ன வயதில் சொன்னது மட்டும் இன்னும் மறந்திலேன்; ‘உண்டு‘ என்பதைக் கண்டிலேன் தெளியப் 5 பண்டைநம் முன்னோர் பகர்ந்ததை எல்லாம் படித்துப் பார்த்தேன்; பாடமும் கேட்டேன்; ஒடித்துப் பிரித்தும் ஊன்றி எண்ணினேன்; "நீறு பூசினால் நேர்ந்திடும்" என்றார்; நீறு பூசியெந் நேரமும் கழித்தேன்; 10 "கண்டிகை தரித்தால் காணலாம்" என்றார்; கண்டிகை கனத்தும் கண்டிலேன் பொருளை; "நாமம் தரித்தால் நாடலாம்" என்றார்; நாமம் புனைவதில் நாள்பல கழித்தேன்; "துளசி மாலையும் துணைசெயும்" என்றார்; 15 துளசியும் தொடுத்தேன்; மணிகளும் சுமந்தேன்; "பஜனை செய்தால் பலித்திடும்" என்றார்; பஜனை கோஷ்டியில் பாடினேன் பலநாள்; "ஊனும் உயிரும் அவனே" என்றார். ஊனினும் காணேன்; உயிரினும் காணேன்; 20 "கோயிலிலும் குளமும் குடியிருப்பு" என்றார்; கோயிலில் தேடினேன்; குளத்திலும் முழுகினேன்; "வேத நூல்களில் விளங்கிடும்" என்றார்; வேதமும் கேட்டேன். விளங்கவே இல்லை; "மந்திரம் கற்றால் வந்திடும்" என்றார்; 25 மந்திரம் செபித்தேன் தந்திரம் பலித்திலேன்; ‘பட்டினி இருந்தால் பார்க்கலாம்" என்றார்; பட்டினி விரதம் பழகியும் பார்த்தேன்; |