புலவர் சிவ. கன்னியப்பன் 481

"மூச்சை அடக்கினால் முன்வரும்" என்றார்;
மூச்சைப் பிடித்து முயன்று பார்த்தேன்;       30

கண்டிலேன் அந்தக் கடவுளை; அதனால்
"பண்டை வழிகளில் பயனிலை போலும்!
எந்தையர் சொன்ன இந்து மதத்திலே
இந்த ரகசியம் இல்லையோ?" என்று
மதங்கள் என்று மற்றவர் சொன்ன.       35

விதங்களை எல்லாம் விரித்திடும் நூல்கள்
புத்தகம் பற்பல புரியப் படித்தேன்;
வித்தகர் சொன்ன விளக்கமுங் கேட்டேன்;
புதுப்புது வழிகளில் புகுந்து புகுந்து
மதிப்புள எல்லா மார்க்கமும் போனேன்;       40

செல்லா வழியென எண்ணிநான் சென்ற
எல்லா வழிகளும் என்னைக் கொண்டுபோய்
முன்னே இருந்த மூலையே சேர்ந்தன.
என்னே! தெய்வம் எங்கோ! எதுவோ
இருந்த இடத்தில் இல்லையென்(று) எண்ணித்       45

திரிந்த இடத்திலும் செரிந்திட வில்லையே!
இல்லையென் றுரைக்கத் தைரியம் இல்லை;
தொல்லையென்(று) அதனைத் துறக்கவும்
துணிவிலை;
இல்லையே ஆனால் தொல்லையே இல்லை
நல்லதே நம்மைக் கேட்பார் இல்லை;       50

இருப்பதும் உண்மைதான் என்றால் என்ன?
பொறுப்பதும் அவர்க்கே; காத்தருள் புரியும்.

குறிப்புரை;- வித்தகர் - மேலானவர்.

16 நா.க.பா. பூ.வெ. எ. 489