புலவர் சிவ. கன்னியப்பன் 483

சத்தியஞ்சேர் சாந்தவழி அதையே நித்தம்
       சாதிப்பான் காந்தியென்று சலிப்பாய் ஆனால்
பத்தியத்தைப் பாதியிலே முறித்தாற் போலப்
       பாடுபட்டும் பயனடையாப் பதரே ஆவாய்.       4

மாறுகின்ற சிறுபொருள்கள் மயக்கத்தாலே
       மாறாத உண்மைகளை மறந்தாய் நெஞ்சே
கூறுபல மாற்சரியம் குறைய நம்முள்
       குற்றமற்ற காந்திவழி வேண்டும் என்றே
வேறுபல துன்பவழி எல்லாம் விட்டு
       வெகுபுதிய காந்திவழி விரும்பிக் கொண்டாய்
சேறுபட்ட உலகநடை மீட்டும் சேர்ந்து
       செய்தஅருந் தவப்பயனைச் சிதறு கின்றாய்.       5

கலகமெலாம் கைகோத்துக் களிக்கூத் தாடக்
       கரடிபுலி சிங்கமென மனிதர் சீற
அலகைபற்றி ஆட்டுதல்போல்அகிலம் அஞ்ச
       அடிதடியும் கொலைகளவும் அறம்போல் ஓங்க
உலகமெலாங் காந்தியையே உற்றுப் பார்த்தே
       உய்வதற்கோர் புதியவழி உரைத்தான் என்று
பலகலையின் அறிஞரெல்லாம் புகழப் பார்த்தும்
       பரிகசித்தாய் நீஅவனைப் பாவி நெஞ்சே!       6

அச்சமிக்க இருட்டறையில் அடைப்பட்(டு) அங்கே
       அழுவதற்கும் சீவனற்றுக் கிடந்த உன்னை
மிச்சமுள்ள மூச்சுமற்றும் போகு முன்னால்
       மீட்டணைத்து மேனிசெய்து விட்டான் காந்தி!
இச்சகத்தில் அறிவறிந்தோர் என்றும் வாழ்த்தி
       இன்பமிகும் காந்திவழி பழசாம் என்றால்
பச்சையிளங் காய்புதியது என்று கொண்டு
       பழத்தபழம் பழசென்னும் பான்மை ஆகும்.       7