492நாமக்கல் கவிஞர் பாடல்கள்

பொதுநலமே பூஷணமாய்ப் பூண்டு நின்றான்
       பொறுமையுடன் வறுமையையும் போற்ற லானான்.
துதிபெறும்ஓர் ஆசையில்லாக் கர்ம யோகத்
       தூயமனத் தொண்டன்எனத் துலங்கு கின்றான்.       2

மங்கிநின்ற சங்கீதம் மணக்கச் செய்தான்
       மறைந்துநின்ற நாட்டியத்தை விளங்க வைத்தான்;
பங்குகொண்டு நாடகத்தில் வேடந் தாங்கிய
       பரிமளிக்கச் செய்துவைத்தான் அரங்கம் தன்னைச்
சங்கமெனப் பலகலைக்கும் சபைகள் கூட்டிச்
       சாத்திரத்தை விளக்குகின்ற சர்ச்சை செய்தான்;
எங்கும்இந்நாள் இளம்பெண்கள் ஆடிப் பாடி
       இன்பளித்தல் இவனுழைப் பயனே காண்போம்.       3

அலைகொள்ளும் மனக்குரங்கை அடங்கச்செய்து இங்(கு)
       ஆனந்த மேலீட்டின் அமைதி கூட்டி
நிலையின்பத் தெய்வத்தை நினைக்கத் தூண்டும்
       நீர்மையுள்ள சங்கீதம், நிருத்தம்என்னும்
கலையின்பம் தருகின்ற களிப்பை அல்லால்
       மற்றெதையும் இன்பமெனக் கருத மாட்டேன்.
விலையென்று தனக்கெதையும் விரும்பிடாத
       விழுமியனும் ஈகிருஷ்ணஐயன் மெய்யே.       4

அன்புவழி இன்னதென அறிந்த நல்லோன்;
       அருள்சேர்ந்த செயல்களுக்கே ஆர்வ முள்ளோன்;
துன்பமுற நேர்ந்தவர்கள் எவர்க்கு ஆனாலும்
       துணைபுரியத் துடிதுடிக்கும் தூய நெஞ்சன்;
இன்பமும் மாறாத இனிய சொல்லன்;
       ஈகிருஷ்ண ஐயரெனும் எங்கள் நண்பன்;
தென்புடனே கலையறிவைத் திகழச் செய்யும்
       திருப்பணிக்காய் நீடூழி வாழ வேண்டும்.       5