சீலமிகும் பெண்மணிகள் திகழ்ந்த நாட்டைச் சிற்றடிமைக் கொப்பிவிற்றுத் தின்றீர்!" என்று தாலுழுது பறைசாற்றித் தமிழ்ப்பா வோதித் தட்டியெழப் பாரதிதான் கவிசெய் தானே! 7 "அருமகனைத் தேர்க்காலில் அரைத்த வேந்தும் பழியஞ்சித் தன்கையை அரிந்த கோனும் தருமமிலை கோவலனைக் கொன்ற தென்று தானறிந்த அக்கணமே சவமாய் வீழ்ந்த பெருமையுள்ள திறல்வேந்தர் பின்னே வந்தீர் பித்தடிமைக் குற்றேவல் பிழைத்தீர்‘ என்றே உருகிமனம் விரிந்துயரும் கவிக ளாலே உணவளித்த பாரதியின் உரைதான் என்னே! 8 பாரிமுதற் சடையப்ப வள்ள லென்று பாவலர்கள் நாவிலுறை பலபேர் வாழ்ந்து சீரிலகும் தமிழ்மொழியின் இனிய ஓசை திசையனைத்தும் போயொலிக்கச் செய்த நாட்டில் ஊறியநற் சுவையொழுகும் கவிக ளாலே ஊக்கமிகத் தமிழ்நாட்டிற் குணர்வைத் தந்த பாரதியார் மிகக்கொடிய வறுமை மேவப் பார்த்திருந்த தமிழருற்ற பழிதான் என்னே! 9 சோற்றினுக் கறிவை விற்றுத் தூர்த்தரைப் புகழ்ந்து பாடிச் சோம்பரைச் செல்வ ரென்று தொழுதுடல் சுகித்து வாழ்ந்து கூற்றினுக் குடலம் போகக் குப்பையிற் கவிகள் சோரக் குறிவிடா திறந்து போகும் கவிகளின் கூட்டம் சேரார் வேற்றவர்க் கடிமை நீங்கும் விடுதலை வரமே வேண்டி வீரமும் ஞானம் பொங்கச் சக்தியின் வேள்வி பாடி |