வட்ட வடிவத் திலகமும் - புது வண்ணம் கொடுத்த மலர்களும் பட்டு சரிகையும் இன்றியும் - தங்கப் பாவை எனும்படி நின்றனள். 3 கன்னி அழகினைக் கண்டுநான் - சொக்கிக் கட்டி அணைத்திட அண்டினேன் அன்னையெனக் கண்டு நாணினேன் - அவள் அடியில் விழுந்துடல் கோணினேன். 4 ‘அன்னிய எண்ணம் நிறைந்ததால் - பெற்ற அன்னையை முற்றும் மறந்துநான் என்னமதி கெட்டுப் போயினேன்‘ என்று ஏங்கித் தவித்திடல் ஆயினேன். 5 தேனினும் தித்திக்கும் சொல்லினால் - என்னைத் தேற்றி மகன்எனப் புல்லினாள்; வானில் உயர்ந்து பறந்தவன் - போல் வந்த வருத்தம் மறந்தனன். 6 பாமர சொற்களில் பேசினாள் - வெறும் பண்டித வார்த்தைகள் கூசினாள்; ஏமுறும் ஏழையை வாழ்த்தினாள் - செல்வர் இந்திர மோகத்தைத் தாழ்த்தினாள். 7 தெய்வத் தமிழ்மொழிப் பெண்ணவள் - இந்தத் தேசப் பெருமைக்குக் கண்ணவள்; வையம் முழுதையும் வாழ்த்துவாள் - பிறர் வாழ்த்திடத் தன்சுகம் தாழ்த்துவாள். 8 பற்பல ஆயிரம் ஆண்டுகள் - இந்தப் பாரில் இருந்தறம் பூண்டவள்; அற்புதம் இன்னமும் கன்னியே! - புது அழகுத ரும்தமிழ் அன்னையே. 9 |