புலவர் சிவ. கன்னியப்பன் 75

ஏட்டுப் படிப்பைமட்டும் கற்றோமே!
       ஏழைக் கிரங்குமன்பை பெற்றோமா?
நாட்டில் நலிந்தவர்க்காய் அழுதுருகும்
       ராமகிருஷ்ணர் தம் கருணை தொழுதிடுவோம்!       5

சோறும் துணியும்மட்டும் தேடினோமே!
       துன்பம் குறைக்குமருள் கூடினோமா?
கூறும் ராமகிருஷ்ணர் கதைபடிப்போம்
       கூடும் கவலைகளின் முனைஒடிப்போம்.       6

வீடும் மனையும்மட்டும் கட்டினோமே!
       விமலன் அருளைக்கொஞ்சம் கிட்டினோமா?
பாரும் ராம கிருஷ்ணர் சரித்திரத்தைப்
       படித்து ஜெயித்திடுவோம் தரித்திரத்தை!       7

மக்கள் மனைவிபொருள் நல்லதேதான்
       மற்றும் பெரியசுகம் இல்லையோதான்?
மிக்க பெரியஇன்பம் கொண்டபெரியார்
       மேலோர் ராமகிருஷ்ணர் கண்டுதெரிவோம்.       8

உடலுக் கணிகள்பல பூண்டோமே!
       உயிருக் கழகுசெய்ய வேண்டாமோ?
கடனுக் கமுதுசெய்யும் பூசனையெல்லாம்
       கட்டாது ராமகிருஷ்ணர் பேசினதுகேள்.       9

குறிப்புரை:-சுகம் - நலம் (8); கட்டாது - அருள் - கருணை (7);
நலிந்தவர் -வறுமையுற்றவர் (5); ஏகம் - ஒன்று (1).

40. நற்றவசி ரமணரிஷி

சித்தர்களும் முத்தர்களும் செரிந்து வாழ்ந்து
       சேர்த்துவைத்த தவப்பயனின் சிறப்பே யாகும்
எத்திசையும் இவ்வுலகில் எங்கும் காணா
       எழில்மிகுந்த தமிழ்நாட்டின் அமைதி என்றும்