புலவர் சிவ. கன்னியப்பன் 197

சண்டை யென்றே அஞ்சினும்
       சரணம் என்று கெஞ்சினும்
மண்டை உள்ள மட்டிலும்
       மரணம் நம்மை விட்டதோ?       (உலக)6

ஏழை என்ற போதிலும்
       என்ன துன்பம் மோதினும்
கோழை என்று வாழ்ந்திட்டோம்;
       கொடிய ருக்குத் தாழ்ந்திட்டோம்;       (உலக)7

ஊர்கள் தோறும் கூடுவோம்;
       ஒற்று மைகொண் டாடுவோம்;
சீர்கு லைக்க எண்ணுவோர்
       சிந்தை நோகப் பண்ணுவோம்.       (உலக)8

வீதி தோறும் காவலாய்
       வீடு தோறும் ஏவலாய்ச்
சாதி பேதம் தள்ளுவோம்;
       சமர சத்தைக் கொள்ளுவோம்;       (உலக)9

அன்னி யர்க்கி டங்கொ டோம்;
       அரசை யார்க்கும் இனிவிடோம்;
மன்ன ராகி ஆளுவோம்.
       மாநி லத்தில் வாழுவோம்.       (உலக)10

143. கைத்தொழில்

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்;
       கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்;
எத்தொழில் எதுவும் தெரியாமல்
       இருந்திடல் உனக்கே சரியாமோ?       (கை)1

உழவும் தொழிலும் இல்லாமல்
       உலகில் ஒன்றும் செல்லாது;
விழவும் கலையும் விருந்துகளும்
       வேறுள இன்பமும் இருந்திடுமோ?       (கை)2