புலவர் சிவ. கன்னியப்பன் 203

ஆறி அமர்ந்துவிட்டேன் - அருள்
       ஆண்டவன் சன்னதிமுன்
தேறித் தெளிந்த என்னை - எந்தத்
       தீவினை என்னசெய்யும்?       10

147. ஆண்மை

அஞ்சாத நிலையே ஆண்மை
       அஞ்சினோர்க் கருளல் ஆண்மை
கெஞ்சாத வாழ்வே ஆண்மை
       கெஞ்சினோர்க் கிரங்கல் ஆண்மை
மிஞ்சாத கோபம் ஆண்மை
       மிஞ்சினால் காத்தல் ஆண்மை
துஞ்சாத ஊக்கம் ஆண்மை
       துன்பத்தில் துணையாம் ஆண்மை.       1

பொய்யாத நிலையே ஆண்மை
       புகுந்தாருக் கபயம் ஆண்மை
வையாத பேச்சே ஆண்மை
       வருந்தாமல் இருத்தல் ஆண்மை
எய்யாத சொல்லே ஆண்மை
       இகழாமல் இடித்தல் ஆண்மை
பொய்யாது கொடுத்தல் ஆண்மை
       கோள்சொல்லாக் குணமே ஆண்மை.       2

உள்ளதை உரைத்தல் ஆண்மை
       ஒளிப்பதை ஒழித்தல் ஆண்மை
கள்ளத்தைக் கடிதல் ஆண்மை
       கயமையைக் காய்தல் ஆண்மை
எள்ளொத்த துன்பம் கூட
       எவருக்கும் இழைக்கா தாண்மை
வெள்ளத்தைப் போன்ற அன்பின்
       வெற்றியே விரும்பும் ஆண்மை.       3