புலவர் சிவ. கன்னியப்பன் 221

அஞ்சும் மனத்தவரும் - கொஞ்சம்
       ஆண்மை தருமனப் பான்மை யடைந்திட
மஞ்சு விரட்டிடுவோம் - துஷ்ட
       மாட்டையும் அடக்கும் தாட்டிகம் காட்டுவம்
வஞ்சனை மோகங்களும் - தங்கள்
       வாடிக்கை விட்டந்த வேடிக்கை பார்த்துடன்
கொஞ்சி மகிழ்ந்திடும்நாள்! - மைந்தர்
       கூட்டமும் பந்தய ஓட்டமும் மங்களப்
       பாட்டும் மிகுந்த பொங்கல்!       4

மங்கள வாழ்வுபெற்று - மக்கள்
       மாச்ச ரியம்தரும் ஏச்சுக ளைவிட்டு
எங்கள் திருநாட்டில் - இனி
       ஏழ்மையும் யாருக்கும் தாழ்மையும் நீங்கிடச்
செங்கை சிரங்கூப்பித் - தெய்வ
       சிந்தனை யிற்பல வந்தனை பாடிஇப்
பொங்கலை வாழ்த்திடுவோம் - இந்தப்
       பூதலம் யுத்தத்தின் வேதனையாற் படும்
       தீதறப் பொங்குக பால்.       5

குறிப்புரை:- தாட்டிகம் - பலம்; இங்கிதம் - இனிமை;
மாசு - குற்றம்.

162. சுதந்தரப் பொங்கல்

அடிமை விலங்குகள் அகன்றன இனிமேல்
கொடுமை பிறர்பால் கூறுதற் கில்லை
திடமுடன் சத்தியத் தீயினை வீட்டி
மடமை மதவெறி மமதையை எரித்துப்
பொய்யும் மோசமும் புலையும் பொசுங்க       5

வையம் முழுவதும் வாழ்ந்திடத் துணிந்திங்
கன்பெனும் பாலை அடுப்பகத் தேற்றித்