இன்னுயிர் நீ்க்கும் வினைபுரியா திருப்பவ ரேதாம், மிகப்பெரியார் பொன்னுரை இதன்படி வாழ்ந்தவனாம் புண்ணிய மூர்த்திநம் காந்திமகான் அன்னவன் புகழே பாடிடுவோம் அஹிம்சா வழியே நாடிடுவோம். 4 ஒன்றாய் நல்லது கொல்லாமை ஒத்தது பொய்யுரை சொல்லாமை என்றான் வள்ளுவன் திருக்குறளில் எம்மான் காந்திதன் உருக்குறளில் நின்றான் அம்மொழி நிலைநாட்ட நீங்காப் பெரும்புகழ் மலைகாட்டி நன்றாய் நாமிதை உணர்ந்துவிடின் நானிலம் போர்வெறி தணிந்துவிடும். 5 175. கம்பன் திருநாள் கம்பன் திருநாள் கொண்டாடிக் கவிதா தேவியின் அருள்கூடி அன்பின் வாழ்க்கையைக் கடைப்பிடிப்போம் அனைவரும் இன்புறும் படிநடப்போம். 1 கற்றவர்க் கெல்லாம் பொதுவாகும் கம்பன் திருநாள் இதுவாகும் மற்றுள பற்பல நாட்டாரும் மதித்துளம் மகிழ்ந்திடும் பாட்டாகும். 2 தமிழ்மொழி தனக்கொரு தவச்சிறப்பைத் தந்தது கம்பனின் கவிச்சிறப்பே ‘அமிழ்தம் தமிழ்மொழி‘ என்பதுவும் அழியா திருப்பதும் கம்பனதாம். 3 |