244நாமக்கல் கவிஞர் பாடல்கள்

விளையாடித் தீரும் வேறு
       வினையிலாக் குழந்தைக் காலம்;
வளையாடும் கையார் மையல்
       வாலிபப் பருவம் எண்ணும்
திளைவாடித் தீர்ந்த பின்னும்
       தீராத சித்தாக் ரந்தம்;
களையாமெய்ப் பொருளை சற்றே
       கருதுவார் ஒருவ ரில்லை.       7

மனைவி என்பது யார்? மற்றும்
       மக்கள்என் பவர்தாம் யாவர்?
வினைதரும் உலகம் முற்றும்
       விசித்திரம்; சொந்தம், பந்தம்
அனையன யாவை? நீதான்
       யார்? இங்கே எதனின் வந்தாய்?
இனியும்நீ எங்கே போவாய்?
       எண்ணிப்பார் அண்ணே! இன்னே.       8

நல்லவர் தமையே நாடி
       நல்லவர் உறவே கொள்வாய்;
அல்லலை வளர்க்கும் பற்றை
       அறுத்திட அதுவே மார்க்கம்!
மொல்லையாம் பற்று விட்டால்
       மோகமே தீர்ந்து சித்தம்
ஒல்லையில் நிலைத்து வீட்டை
       உயிருடன் அடைவாய் நெஞ்சே.       9

நீரற்றுப் போன பின்பு
       நீர்நிலை உருவம் நீங்கும்;
வீரற்றுப் போயும் காம
       விகாரங்கள் விடாத தேனோ!