206, தமிழ்ப் பண்பைக் காப்போம்! இசைமலிந்த பலகலையும் உலகுக்கு ஈந்தார்; ‘இனிமை‘எனும் தமிழ்மொழியின் உரிமைபூண்டார்; திசைமொழிகள் எங்கெங்கும் வணங்கி வாழ்த்தும் திருக்குறளாம் அறிவளித்த தமிழர் முன்னாள் பசைமிகுந்த ஊக்கமுடன் கடலும் தாண்டிப் பலநாட்டில் நம்பெருமை பரவச் செய்தோம்; வசைகூறும் கட்சிகளாய்ப் பிரிந்தோம் இன்று வறுமையுற்றுப் பெருமைகெட்டு வாழ்தல் காணீர். 1 அறம்வளர்த்த தமிழ்த்தாயைப் பொதுவாய்க் கொண்டும் அன்றிருந்த மூவேந்தர் அவர்கள் கூட மறம்வளர்த்துச் சண்டையிட்ட மடமை யாலே மாற்றார்கள் தமிழ்நாட்டை மடக்கி ஆண்டார்; உரம்இருந்தும் உறவிருந்தும் தமிழர் தம்முள் ஒற்றுமைதான் இல்லாமல் ஒடுங்கிப் போனோம்; திறந்தெரிந்தோம் ஒன்றுபட்டே இனிமே லேனும் தேசநலப் பொதுப்பணிகள் செய்வோம் வாரீர்! 2 அயல்நாட்டை அபகரிக்கும் ஆசைக்கு அல்ல; பிறமொழியை அவமதிக்கும் அகந்தைக்கு அல்ல; இயல்பான உரிமைகளை இழந்தி டாமல் இனப்பெருமை நற்குணத்தை இகழ்ந்தி டாமல் செயலாலும் சொல்லாலும் சிந்தை யாலும் செய்யதமிழ்த் திருநாட்டின் நலமே பேணி உயர்வான தமிழ்ப்பண்பைக் காப்போம் ஆனால் உலகநலம் காப்பதற்கும் உதவி யாகும். 3 207. இடந்தடுமாற்றம் அறிவுக் கேற்ற அலுவல் கிடைப்பதோ படிப்புக்(கு) உகந்த காரியம் பார்ப்பதோ விரும்பிய படிக்குஒரு வேலையில் சேர்வதோ தகுதியைப் பற்றிய தன்மை யுள்ளதாய் உத்தியோகம் அடைவதோ ஊதியம் பெறுவதோ 5 |