தூக்கமும் கலைந்தது ஏக்கமும் கலைந்தது துன்பக் கனவும் தொலைந்ததடா! வாழ்க்கையும் திருந்திட நோக்கமும் விரிந்தது வள்ளல்அக் காந்தியின் நினைப்பாலே! 5 வஞ்சனை நடுங்கிடும் வெஞ்சினம் அடங்கிடும் வாய்மையன் காந்தியின் தூய்மை சொன்னால் அஞ்சின மனிதரும் கெஞ்சுதல் இனியிலை ஆண்மையும் அன்பும் அருளுமடா! 6 ஜீவர்கள் உலகுள யாவரும் சமமெனச் செய்கையில் காட்டிய காந்தியடா! பாவமும் பழிகளும் தீவினை வழிகளும் பதுங்கும டாகண்டுள் ஒடுங்குமடா! 7 எழுபதும் ஐந்தும் குழகுழ வயசினில் என்னே காந்தியின் இளமையடா! முழுவதும் அதிசயப் பழுதறு வாழ்க்கையின் முத்தன டாபெரும் சித்தனடா! 8 காந்தியின் தவக்கனல் சூழ்ந்ததுஇவ் வுலகினைக் காம தகனம்போல் எரிக்குதுபார்! தீய்ந்தன சூதுகள் ஓய்ந்தன வாதுகள் திக்குத் திசையெலாம் திகைத்திடவே! 9 ஏழைகள் எளியவரின் தோழன்அக் காந்தியை எப்படிப் புகழினும் போதாதே! வாழிய அவன்பெயர் ஊழியின் காலமும் வையகம் முழுவதும் வாழ்ந்திடவே 10 குறிப்புரை:-தாட்டிகம் - பலம்; அகந்தை; சூது - வஞ்சனை; வாது - வழக்கு. 246. வையகம் வாழ்த்தும் காந்தி டிமையின் அச்சம் போக்கி அச்சத்தை அடிமை யாக்கிக் |