அன்பினைத் தகழி யாக்கி அறிவினை நெய்யாய் வார்த்து வன்புலக் காம மாதி வர்க்கத்தைத் திரியாய் வைத்துச் செம்பொருள் காணும் தூய்மைச் செழுங்கனல் பற்றச் செய்தே இன்பருள் கருணை சோதி ஏந்திடும் காந்தி நாமம். 5வஞ்சமும் பகையும் போகும் வையகம் முழுதும் ஓங்கிப் பஞ்சமும் பசியும் நோயும் படுத்திடும் கொடுமை நீங்கத் தஞ்சமொன் றுண்டோ காந்தி தந்துள வழியை விட்டால்? அஞ்சலி செய்வோம் காந்தி அண்ணலின் அருளைப் போற்றி. 6 காந்தியை மறந்து விட்டால் கதிநமக் கில்லை கண்டீர் சாந்தியை இழப்போம் மக்கள் சமரச வாழ்வு குன்றும்; சேர்ந்திடும் தீமை யாவும்; திரும்பவும் அடிமை வாழ்வு சேர்ந்திடல் ஆரும் உண்மை நித்தமும் நினைக்க வேண்டும். 7 குறிப்புரை:-தஞ்சம் - அடைக்கலம்; கனல் - நெருப்பு 247. அற்புதன் காந்தி ஜயஜய காந்தியின் திருப்புகழ் பாடி; தெய்வம் தொழுவோம் அனைவரும் கூடி பயனுற காந்தியின் புதுநெறி பயின்று பாரத நாட்டினர் பலம்பெற வேண்டும். (ஜெய) |